மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தென் தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை புதன்கிழமையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2015, 9:13 am

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை புதன்கிழமையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகத்தின் கடலோரம் மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள், கேரள  உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை இடியுடன் கனமழை பெய்யும். தெலுங்கானாவை பொறுத்தவரை வறண்ட வானிலையே தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. மயிலை (கன்னியாகுமரி), மேலூர் (மதுரை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.