மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இணையதள குற்றங்களைத் தடுக்க விரைவில் இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் பெருகி வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், தவறான தகவல்கள் மூலம் இளைஞர்கள் தவறானப் பாதைக்கு திருப்பப்படுவதை தடுக்கும் வகையிலும் விரைவில்  இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சார் ராஜ்நாத் சிங் கூறினார்.

News image
Updated On :5 நவம்பர் 2015, 11:14 am

இந்தியாவில் பெருகி வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், தவறான தகவல்கள் மூலம் இளைஞர்கள் தவறானப் பாதைக்கு திருப்பப்படுவதை தடுக்கும் வகையிலும் விரைவில்  இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சார் ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுதில்லியில் வியாழக்கிழமை தகவல் பாதுகாப்பு மாநாட்டை தொடக்கிவைத்து அவர் பேசுகையில்,  இணையதள பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனத்துடன் செயல்படுகிறது என்றார்.

இணையவழி குற்றங்களைத் தடுப்பது குறித்து நிபுணர்குழு அளித்த ஆலோசனையின்படி, விரைவில் இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்.

ரூ. 400 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த மையம் இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் - ஐசி-4 (Indian Cyber Crime Coordination Centre- IC4) என அழைக்கப்படும். இதன்மூலம் இணைய வழி குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஐசி4 அமைப்பு மூலம் புகார்களும் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ராஜ்நாத்சிங்.

மேலும், இந்த மையம் இணைய வழி குற்றங்களைத் தடுப்பதற்கு சி.பி.ஐ. மற்றும் மாநில காவல் துறைக்கு தேவையானை அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.