தேசத் துரோக வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள படேல் சமூகத்தினருக்காக போராடி வரும் ஹார்திக் படேலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக தளங்களில் பரவியதால் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஹார்திக் படேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் அருகில் நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்ட காவலர் மகேந்திரசிங்கும், புகைப்படத்தை எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்ட தலைமைக் காவலர் அருண் டாலேவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருக்கும் குற்றவாளிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.