ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை மற்றும் குளிர்காலங்களை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் தவிர பிற அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும்.
ஸ்ரீநகரில் முனிசிபல் பகுதிகளுக்குள் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், முனிசிபல் பகுதிகளுக்கு வெளியே இயங்கும் பள்ளிகள் காலை 11 மணி முதல் 4 மணி வரையிலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப காஷ்மீரில் இதுபோல அலுவலக நேரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.