10-15 ஆண்டுகள் பதவியில் இருப்போம்: கேஜரிவால் கனவு காண்பதாக ஜாவடேகர் விளாசல்

தில்லியில் இன்னும் 10-15 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம் என்று அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசிய அரவிந்த் கேஜரிவாலை, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக விமரிசித்துள்ளார்.
Updated on
1 min read

புது தில்லி : தில்லியில் இன்னும் 10-15 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம் என்று அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசிய அரவிந்த் கேஜரிவாலை, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஜாவடேகர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 10 முதல் 15 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவதாகக் கனவு காண்கிறார் என்று கூறினார்.

மேலும், இது என்ன விதமான செயல்பாடு? அவர் மட்டுமே இதனை விளக்க முடியும். மத்திய அரசு ஊழியர்களை எவ்வாறு அவர் இந்த விதமாக மிரட்டலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com