இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி: விமானப்படை வீரரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!   

தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி கோரி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2016, 11:15 am

புதுதில்லி: தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி கோரி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வருபவர் முகமது ஸுபைர். இவர் கடந்த 10.01.2005 அன்று தான் ஒரு இஸலாமியர் என்பதால் தன்னுடைய தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி வேண்டும் என்று கோரி தனது உயர் அதிகாரியிடம்    மனு கொடுத்தார். ஆனால் இவரது மனுவானது அடுத்த மாதமே உயர் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் இந்த முடிவை எதிர்த்து ஸுபைர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவருடன் மற்றொரு வீரரான அன்சாரி அப்தாப் அகமதுவும் தன்னை இணைத்துக் கொண்டார்.  இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் டி .ஒய் .சந்திரசூட்  மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வானது இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தாவது:

இந்திய  விமானப்படையை பொறுத்த அளவில் தனிப்பட்ட தோற்றம் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை எந்த ஒரு மத நம்பிக்கைகளுக்கும் பாரபட்சம் காட்டும்படி அமைந்தது அல்ல. ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் அதனுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானதும் அல்ல.

படை வீரர்களிடையே ஒற்றுமை, ஒரு சீரான ஒழுங்கமைவு, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை  உருவாக்குவதை மனதில் கொண்டே  இத்தகைய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு படையிலும் இத்தகைய விஷயங்கள் சகஜமானவைதான்.

இவ்வாறு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.