மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சக்கர தீர்த்தத்தில் தங்கப் பல்லி தரிசனம்

இந்நிலையில் கடந்த மகா சிவராத்திரி அன்று சக்கர தீர்த்தத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றபோது

News image
Updated On :9 மார்ச் 2016, 9:20 pm

தினமணி

திருமலையில் உள்ள சக்கர தீர்த்தத்தில் தங்கப் பல்லி தரிசனம் தந்தது.
 காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தங்கப்பல்லி, வெள்ளிப் பல்லி சிற்பங்களைத் தொட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. திருமலையில் பாபவிநாசம் மார்க்கத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் உண்மையாகவே தங்கப்பல்லி உள்ளது.
 சேஷாசல வனத்தில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் அரிய வகையைச் சேர்ந்தது தங்கப் பல்லி. தற்போது இது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
 இந்தப் பல்லி, சக்கர தீர்த்தத்தில் உள்ள பாறைகளின் இடுக்கில் வாழ்ந்து வருகிறது. திடீரென ஒருநாள் அது வெளிவந்து அனைவரின் கண்களுக்கும் தென்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பல்லியை யாரும் காணவில்லை. எனவே இப்பல்லி இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
 இந்நிலையில் கடந்த மகா சிவராத்திரி அன்று சக்கர தீர்த்தத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றபோது பாறை இடுக்கிலிருந்து தங்கப் பல்லி திடீரென வெளியில் வந்து அனைவருக்கும் தரிசனம் தந்தது. இரவில் தகத்தகவென மின்னிய தங்கப் பல்லியை கூடியிருந்த பக்தர்கள் தரிசித்தனர்.
 அறிவியல் உண்மை: இந்த தங்கப் பல்லியின் விலங்கியல் பெயர் "காலோடாக்டீலோடஸ் ஆரிஸ்'. இந்த உயிரினம் இரவில் மட்டுமே வெளியில் வரும் ஒரு அரிய வகையைச் சேர்ந்தது. முதிர், இள மஞ்சள் கலந்து தங்க நிறத்தில் ஜொலிக்கும். இது 150 மி.மீ. முதல் 180 மி.மீ. வரை நீளமாக வளரும். பெரும்பாலும் கற்பாறை இடுக்குகளில் மட்டுமே வாழும்.
 சூரியஒளி படாத குளிர்ந்த பிரதேசங்களில் அதிக அளவில் காணப்படும் இந்தப் பல்லி, 40 முதல் 50 முட்டைகள் வரை இடும். சாதாரண பல்லி போலல்லாது விந்தையாக சத்தமிடும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.