அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெங்கய்ய நாயுடு: சுதந்திர இந்தியாவில் பிறந்து குடியரசுத் துணைத் தலைவராகியிருக்கும் முதல் நபர்

சுதந்திர இந்தியாவில் பிறந்து குடியரசுத் துணைத் தலைவராகியிருக்கும் முதல்வர் நபர் வெங்கய்ய நாயுடு என்ற பெருமையை பெற்றுள்ளார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2017, 5:29 am

DIN


புது தில்லி: சுதந்திர இந்தியாவில் பிறந்து குடியரசுத் துணைத் தலைவராகியிருக்கும் முதல்வர் நபர் வெங்கய்ய நாயுடு என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த நபர் ஒருவர் முதல் முறையாக குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதே போல, நரேந்திர மோடியும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர்களின் பட்டியல்...
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சாகீர் ஹுசைன்
வரதகிரி வெங்கட்ட கிரி
கோபால் சுவரூப் பதக்
பசப்பா தனப்பா சாத்தி
முகம்மது இதயத் உல்லா
இராமசாமி வெங்கட்ராமன்
சங்கர் தயாள் சர்மா
கோச்செரில் ராமன் நாராயணன்
கிருஷ்ண காந்த்
பைரோன் சிங் செகாவத்
முகம்மது அமீது அன்சாரி
வெங்கய்ய நாயுடு

குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு இன்று உதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

புது தில்லியில் வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில், பட்டுவேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த வெங்கய்ய நாயுடு, குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி, தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி உட்பட பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.