பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொலை

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவன் இந்திய ராணுவத்தால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 2:05 pm

DIN

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள புல்வாமா என்ற இடத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவத்தில் இருந்து தக்க பதிலடி அளிக்கப்பட்டது. 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஆயூப் லேல்ஹாரி என்பவன் இந்திய பாதுகாப்புப் படையால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், 3 பயங்கரவாதிகள் வரை இதில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற இடத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சோஃபியன் பகுதியில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிசாபுல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி யாசின் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீர் பிரிவு தளபதி மெஹமுது கஸ்னவி அதே இடத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுபோல சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.