இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

5 மாநில தேர்தலும் தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடியும்

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2017, 10:54 am

DIN


புது தில்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதோடு, 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் ஏராளமான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 4 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை பல கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதியும், உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதியும், மணிப்பூரில் மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாகவும் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், சில முக்கிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு கட்சியின் வேட்பாளரைப் பற்றிய எந்த விதமான செய்தியும், அந்த கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் அதற்கான செலவும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

மேலும், தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும், அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த கட்டணம் மற்றும் வரியை பாக்கி வைத்திருக்கக் கூடாது.

மத அல்லது ஜாதி ரீதியாக யாரும் வாக்கு சேகரிக்கக் கூடாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்த உள்ளது.

மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.