இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்கக் கோரும் வழக்கு: திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு!

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடியும்வரை மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம்...

News image
Updated On :20 ஜனவரி 2017, 10:25 am

DIN

புதுதில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடியும்வரை மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் வரும் பிப்ரவரி மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நடை பெற உள்ளன. எனவே இந்த தேர்தல்கள் நடந்து முடியும் வரை மத்தியபட்ஜெட் தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி, தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் ஒய்.எஸ்,.சந்திரசூட் அடங்கிய அமர்வானது மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகள் எதுவுமிருந்தால் அது பற்றிய விபரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு மனுவை இன்று ஒத்திவைத்தனர்.        

இன்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தற்பொழுது மனுதாரர் ஷர்மா தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாணப் பாத்திரங்களை பரிசீலிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திங்கள் அன்று தான் இதுகுறித்து வாதாட தயாராக உள்ளதாக வும் மனுதாரர் ஷர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.