அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் ரூ.64,564 கோடியாக அதிகரிப்பு

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமாக ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

DIN

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமாக ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட முதல் 7 மாதங்களில் மட்டும் அந்தக் கணக்குகளில் ரூ.300 கோடி செலுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக்கும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8}ஆம் தேதி வெளியிட்டார். பொதுமக்கள் தங்களிடமிருந்த அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, செல்லுபடியாகக் கூடிய ரூபாய் நோட்டுகளாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு செய்யும் நோக்குடன் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வந்து, வரி வருவாயைப் பெருக்குவது, அந்த அதிரடி அறிவிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது. எனினும், ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகளின் பலனை அளிக்கும் நோக்கில் பிரதமர் மோடியால் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகளை கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கணக்கில் காட்டாமல் பதுக்கியிருந்த பெருந்தொகைகளை அவர்கள் பிறரது வங்கிக் கணக்குகள் மூலம், அந்த வாடிக்கையாளர்களைக் கொண்டே செலுத்துவதாக நாடு முழுவதும் பரவலாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக பணம் செலுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது. இந்த நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு ஜன் தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதம் 14}ஆம் தேதி நிலவரப்படி, ஜன் தன் திட்டத்தின் கீழ் 28.9 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. இவற்றில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 23.7 கோடி கணக்குகளும், மாநில அரசுகளின் ஊரக வங்கிகளில் 4.7 கோடி கணக்குகளும் உள்ளன. தனியார் வங்கிகளில் 92.7 லட்சம் ஜன் தன் கணக்குகள் உள்ளன.
அனைத்து ஜன் தன் கணக்குகளிலும், மொத்தம் ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.50,800 கோடியும், ஊரக மற்றும் தனியார் வங்கிகளில் தலா ரு.11,683 கோடி மற்றும் ரூ.2,080.62 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 16}ஆம் தேதி நிலவரப்படி, 25.58 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.64,252.15 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்ததாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் தெரிவித்தார். இந்த வகையில், கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் 16}ஆம் தேதியிலிருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம் 14}ஆம் தேதி வரையிலான 7 மாதங்களில் மட்டும் ஜன் தன் கணக்குகளில் ரூ.311.93 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.