மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஜயவாடாவில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், 2 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேர் கைது

News image
Updated On :19 ஜூலை 2017, 4:22 am

DIN

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், 2 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தைக் கொடுத்தனுப்பிய சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ராமவாரபடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு கட்டுக்கட்டாக 2 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற நகைக்கடைக்காரர் கமிஷனுக்கு பணத்தை மாற்ற தங்களிடம் தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயச்சந்திரனிடம் 5 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் மாற்ற முடியாமல் தேங்கி விட்டதால் அதை மாற்ற அவர் சிலரிடம் 3 கோடி ரூபாய் கொடுத்த போது அவர்கள் கள்ள நோட்டுகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என்றும், அதன் பிறகு ரமேஷ் ஜெயின் என்பவரிடம் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து அவர் 25 சதவீத கமிஷன் பேசி ஆட்களை நியமித்ததாகவும் விஜயவாடா காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பணத்தை மாற்ற இந்த கும்பல் பல முயற்சிகள் செய்தும் மாற்ற முடியாமல் சென்னைக்கே கொண்டு செல்ல திட்டமிட்ட போது போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருமே சாதாரண நடுத்தர மக்கள் என்றும், பணத்தாசையால் சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஜெயின் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.