தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்:எங்கே போனது 'தூய்மை இந்தியா'?

பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டியதன் அவசியம் கருதி, அதனை கைக்கொள்ள வேண்டி கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய அரசு செலவழித்து வரும் வேளையில்..

News image
Updated On :29 ஜூன் 2017, 7:02 am

DIN

புதுதில்லி: பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டியதன் அவசியம் கருதி, அதனை கைக்கொள்ள வேண்டி கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய அரசு செலவழித்து வரும் வேளையில், மத்திய அமைச்சர் ஒருவரே பொது இடத்தில் சிறுநீர் கிழித்த விவகாரம் கடுமையான சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.     

மத்திய விவசாயத் துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன் சிங். இவர் பிகாரின் கிழக்கு சம்பரான் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டவர். இவர் சமீபத்தில் தனது தொகுதியில் உள்ள மோதிஹரி என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது செல்லும் வழியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வழியில் காரிலிருந்து இறங்கியுள்ளார்.  உடனடியாக அருகில் உள்ள சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இதற்கு ஆயுதம் ஏந்திய அவரது பாதுகாவலர்கள் இருவர் பாதுகாப்புக்கு நின்றதுதான்.

பிரதமர் மோடி முன்முயற்சி எடுத்து கொண்டு வந்திருக்கும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியமான பகுதியே, 'பொதுவெளியைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்பதுதான்.ஆனால் பொறுப்பான பதவியில் இருக்கும் மத்திய அமைச்சரின் இந்த செய்கை சமுக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும்  கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அமைச்சர் ராதா மோகன் சிங் சர்ச்சையில் சிக்குவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். இந்த மாத துவக்கத்தில் மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஐந்து விவசாயிகள் உயிரிழந்தனர். அத்தகைய பதற்றமான சூழலில், யோகா குரு ராம்தேவுடன், அமைச்சர் ராதா மோகன் சிங் கடந்த எட்டாம் தேதி அன்று, யோகா நிகழ்வு ஒன்றில் பங்கேற்றது கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.