மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

5 மாதத்தில் அசுர வளர்ச்சி கண்ட சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடியில் இருந்து கடந்த 5 மாதத்தில் ரூ.330 கோடியாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2017, 7:47 am

DIN


ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடியில் இருந்து கடந்த 5 மாதத்தில் ரூ.330 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையின் நியமன உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நாரா லோகேஷ், அம்மாநிலத்தின் மிகப் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில்  முன்னிலை வகிக்கிறார்.

நியமன உறுப்பினருக்கான தேர்தலுக்காக லோகேஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.329.52 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ரூ.273.84 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.56.52 கோடி அசையா சொத்துக்கள்.

தற்போது தேர்தல் ஆணையத்திடம் லோகேஷ் அளித்துள்ள சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகமாகும்.

ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, கடந்த சில வருடங்களாக தங்களது குடும்ப சொத்து மதிப்பை மக்களுக்கு வெளியிட்டு வந்தார். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் வெளியான தகவலில் லோகேஷ் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடிதான்.  அதோடு, சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பே ரூ.74 கோடிதான். ஆனால், தற்போது லோகேஷின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 20 மடங்காக உயர்ந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள லோகேஷ், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி நான் எனது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளேன். 5 மாதங்களுக்கு முன்பு பழைய மதிப்பில் இருந்தது. எவ்வளவே என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.