மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஷ்மீரில் கடும் சண்டை: பயங்கரவாதி உள்பட 4 பேர் சாவு

மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

News image
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியபோது எழுந்த கரும்புகை.
Updated On :29 மார்ச் 2017, 4:29 am

தினமணி

மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, போலீஸார் தெரிவித்ததாவது: பட்காம் மாவட்டம், சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை அதிகாலை அங்கு சென்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சதூராவை சுற்றி வளைத்த போலீஸார், அப்பகுதியை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சதூராவுக்கு உள்பட்ட தூர் பாக் பகுதியிலிருந்து திடீரென வெளிப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சண்டை தொடர்ந்து பல மணி நேரத்துக்கு நீடித்தது. இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி இடையூறு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மேலும் பலர் அங்கு திரண்டு வந்து பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசினர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
எனினும், இந்தக் கிளர்ச்சியின்போது 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக கல்வீச்சு தாக்குதலின்போது, இளைஞர் ஒருவரின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. உயிரிழந்தவர்கள் ஜாஹித் தார், சாகிப் அகமது, இஷ்ஃபாக் அகமது வானி ஆகிய மூவர் என்பது தெரியவந்துள்ளது. மூவரும் 20 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.