ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் மாதிரி வரைபடம் வெளியீடு

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக சந்தேகிக்கும் 3 நபர்களின் மாதிரி வரைபடத்தை சிறப்பு புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமைவெளியிட்டது.

News image
Updated On :14 அக்டோபர் 2017, 9:44 am

DIN

பெண் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கௌரி லங்கேஷ் தனது இல்லத்தின் வெளியே மர்ம நபர்களால் செப்டம்பர் 5-ம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் பல சிக்கல்கள் நீடித்தது. கௌரி லங்கேஷ் கொலையை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பத்திரக்கையாளர் என்ற முறையில் அவரது கொலைக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலைக்கான காரணத்தை கண்டறியும் விதமாக கர்நாடக காவல்துறையால் சிறப்புப் புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக சந்தேகிக்கும் நபர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பின் பி.கே.சிங் கூறியதாவது,

நாங்கள் 200 முதல் 250 பேர் வரை இவ்வழக்கு தொடர்பாக விசாரித்தோம். அதில் கிடைத்த பலதரப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகிக்கும் கொலையாளிகள் குறித்த மாதிரி வரைபடத்தை வெளியிட்டுள்ளோம். இந்த வரைபடங்கள் 2 ஓவியர்களைக் கொண்டு வரையப்பட்டது.

இந்த ஓவியத்தின் அடிப்படையில் கொலையாளிகள் குறித்த முழு விவரம் தெரியவில்லை. அதுபோல கல்புர்கி என்ற எழுத்தாளர் கொலைச் சம்பவத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அதே ஆயுதங்கள் இவரது கொலையிலும் பயன்படுத்தப்பட்டதா என்பதும் சரிவரத் தெரியவில்லை.

இந்தக் கொலைத் திட்டம் தொடர்பாக அந்த கொலையாளிகள் சுமார் 7 முதல் 15 நாட்கள் வரை கௌரி லங்கேஷின் நடவடிக்கைகளை நோட்டம் விட்டிருக்கலாம். இதுதொடர்பாக விரைவில் ஒரு விடியோ பதிவையும் வெளியிட உள்ளோம்.

இந்த மாதிரி வரைபடத்தைக் கொண்டு சரியான குற்றவாளிகளைப் பிடிக்க பொதுமக்கள் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.