இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மும்பையில் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; ரயில், விமானங்கள் சேவை பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ந்த கனமழையால் ரயில்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 4:09 am

DIN


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ந்த கனமழையால் ரயில்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக மும்பையில் கன மழை பெய்தது. நாட்டின் நிதி மையமான மும்பையில் கனமழையால் ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கியது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளனர். மும்பை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 56 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கடுமையான மழை காரணமாக ஐந்து மேற்கு ரயில்வே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை காரணமாக உள்ளூர் ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் பயணிகள் தவித்து வருகின்றனர். மழை நீர் பாதிக்கப்பால் சாலை போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மும்பைக்கு அருகில் உள்ள ரெய்காட் மாவட்டத்தில் மிக இன்று 12.03 மணியளவில் 4.54 மீட்டர் அளவுக்கு அதிகயளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து நேற்று மும்பையில் உள்ள பள்ளி கல்லூரிகள் செல்படாத நிலையில் இன்றும் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் ஒடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 225.5 மிமீ மழை பெய்துள்ளது. மூன்று மணி நேரத்தில் (5.30-8.30 மணி) 100 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.