மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட வீரப்பெண்: ரத்தம் சொட்ட ஒரு செல்ஃபி! 

தனது ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட மஹாராஷ்டிரா பெண் ஒருவர், ரத்தம் சொட்ட எடுத்து வெளியிட்ட ஒரு செல்ஃபி இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 1:29 pm IST

நாக்பூர்: தனது ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட மஹாராஷ்டிரா பெண் ஒருவர், ரத்தம் சொட்ட எடுத்து வெளியிட்ட ஒரு செல்ஃபி இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மகாராஷ்ட்ராவின் நாக்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரூபாலி மேஷ்ராம்(23). சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் இவர் படுத்துக் கொண்டிருந்தபோது, வெளியே  அவரது ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக ரூபாலி வெளியே சென்று பார்த்த பொழுது , அவரது ஆட்டை புலி  ஒன்று கவ்விப் பிடித்து கொண்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர் அருகில் இருந்த கம்பு ஓன்றினை எடுத்து புலியைத் தாக்கத் தொடங்கினார். அதனுடன் கடுமையாகப் போராடினார்.

ஒரு கட்டத்தில் ரூபாலியை  புலி ஆவேசத்துடன் தாக்க முயற்சிக்கும் பொழுது, ரூபாலியை அவரது தாயார் வீட்டினுள்ளே இழுத்து தாழிட்டார். புலியும் அங்கிருந்து ஓடி விட்டது. ஏற்கெனவே புலி கடுமையாக தாக்கியதால், ரூபாலியின் ஆடு இறந்து விட்டது.  ரூபாலியின் தலை, கழுத்து, கால், இடுப்பு என கடுமையான காயங்களும் அவரது தாயாருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து வீட்டினுள் ரத்தம் வழியும் முகத்துடன் ரூபாலி அவரது தாயாருடன் சேர்ந்து  செல்ஃபியும் எடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிர்ஷ்டவசமாக ரூபாலி  உயிர் பிழைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.