மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுலின் இரு வேறு முகங்கள்: அமித் ஷா விமர்சனம்

கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதை பாஜக

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:40 pm

DIN

கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதை பாஜக தேசியத் தலைவர் விமர்சித்துள்ளார். 
இந்தச் சந்திப்பு, ராகுல் காந்தியின் இரு வேறு முகங்களைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கோலார் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், தண்டனை பெற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவசரச் சட்டம் கொண்டுவர முற்பட்டது. அந்த அவசரச் சட்டத்தின் நகல்களை ராகுல் காந்தி கிழித்தெறிந்து, 'குற்றவாளிகளைக் காப்பாற்றுவது முட்டாள்தனமான முடிவு' என்றார்.
ஆனால், அதே ராகுல் காந்திதான், கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாதை, அவர் சிகிச்சைப் பெற்ற தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று திங்கள்கிழமை நலம் விசாரித்தார். ராகுலின் இந்த நடவடிக்கை, அவரது இரு வேறு முகங்களைக் காட்டுகிறது.
இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு கட்சியால், கர்நாடகத்தில் நேர்மையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. ஒரு கட்சியின் தலைவர் ஊழலை ஆதரித்தால், எப்படி நல்லாட்சியைத் தர முடியும்?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், லாலு பிரசாதின் ஆதரவின்றி வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆகவேதான், லாலு பிரசாதை ராகுல் காந்தி சந்தித்துள்ளார் என்றார் அமித் ஷா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.