/

மேற்கு வங்கம்: இடி, மின்னல் தாக்கி 13 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:49 pm

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது: மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் இடி, மின்னல் தாக்கியது. இதில், நாடியா, முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தக்ஷின் தினாஜ்பூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் பலர் தங்களுடைய வீடுகளுக்கு வெளியே இருந்த நேரத்திலும், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்திலும் இடி, மின்னலால் தாக்கப்பட்டனர். காயமடைந்த 25 பேரில் 4 பேர், புரூலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.