மேற்கு வங்கம்: இடி, மின்னல் தாக்கி 13 பேர் பலி
மேற்கு வங்க மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.


மேற்கு வங்க மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது: மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் இடி, மின்னல் தாக்கியது. இதில், நாடியா, முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தக்ஷின் தினாஜ்பூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் பலர் தங்களுடைய வீடுகளுக்கு வெளியே இருந்த நேரத்திலும், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்திலும் இடி, மின்னலால் தாக்கப்பட்டனர். காயமடைந்த 25 பேரில் 4 பேர், புரூலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...