ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளால் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் டெக்னிஷியன்ஸ், லோகோ பைலட் இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறுமா? என கேள்வியெழுந்தது.
இந்நிலையில், அந்தத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய ரயில்வே தகவல் தொடர்பு துறை இயக்குநர் ராஜேஷ் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
எனினும், கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கேரளத்தில் இந்தத் தேர்வுகளை 27 ஆயிரம் பேர் எழுத இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







