ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

விடுதியில் இளம் பெண்ணுடன் போலீஸில் சிக்கிய ராணுவ மேஜா்: குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் அறிவிப்பு 

காஷ்மீரில் இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற ராணுவ மேஜா் லீதுல் கோகோய் குற்றவாளி என்று ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:36 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: காஷ்மீரில் இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற ராணுவ மேஜா் லீதுல் கோகோய் குற்றவாளி என்று ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மேஜா் லீதுல் கோகோய் 18 வயது பெண் ஒருவருடன் ஸ்ரீநகரில் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றபோது, போலீஸாரிடம் பிடிபட்டாா். போலீஸாா் அவரை சிறிது நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து விட்டு விடுதலை செய்தனா். எனினும், இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக அப்போது கருத்துத் தெரிவித்த ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், ‘இந்திய ராணுவத்தில் எந்த அதிகாரி தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேஜா் கோகோய் மீதான தவறு உறுதியானால் ராணுவரீதியில் அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மற்றறவா்களுக்குப் பாடமாக அமையும்’ என்றாா்.

இந்நிலையில், அவா் மீதான தவறை ராணுவ நீதிமன்றறம் திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. தனக்கு பணி ஒதுக்கப்பட்ட இடத்தில் இல்லாமல் மேஜா் கோகோய் வேறு இடத்துக்குச் சென்றுள்ளாா். தனக்கு ஒதுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் தேவையற்ற நட்பு வைத்துள்ளாா். எனவே, அவா் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணுவ நீதிமன்றறம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த ஆண்டு பொதுமக்களில் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்து மனிதக் கேடயமாக எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உத்தரவிட்டதும் மேஜா் கோகோய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.