சேஞ்சிங் இந்தியா என்ற பெயரில் 6 பாகங்களை கொண்ட புத்தகங்களை மன்மோகன் சிங் எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவின் இடையே மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 சதவீதமாக உள்ளது. இதனால் இடையூறுகள், முட்டுக்கட்டைகளை மீறி, உலக பொருளாதாரத்தில் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுப்பது உறுதி. மௌன பிரதமர் என்று என்னை அழைப்பதை நிராகரிக்கிறேன்.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தபோது சக மத்திய அமைச்சர்கள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், மணிசங்கர் ஐயர் மற்றும் நாதுராம் மிர்தா எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். எனது நடவடிக்கைகளுக்கு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் நம்பிக்கை அளித்துள்ளார். என்னை எல்லோரும் விபத்துப் பிரதமர் என்று அழைக்கின்றனர். ஆனால் நான் உண்மையில் விபத்து நிதியமைச்சர் ஆவேன்.
பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க நான் ஒருபோதும் அச்சப்பட்டதில்லை. நான் ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் போதும் அதுகுறித்து கட்டாயம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவேன் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


