புது தில்லி: இல்லை, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசு நிர்வாகம் ஒன்று ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பிய கடிதத்தில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்கிவிட்டு, அப்பதவிக்கான வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் செய்தியாளர்களிடம் கேட்டதற்குதான் மேற்கண்ட பதிலை அவர் கூறியுள்ளார்.
அதாவது, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கங்கைப் பணியை முதலில் முடிக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகளை கட்டமைக்க வேண்டும், சார் தாம் பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும், இன்னும் இதரப் பணிகள் உள்ளன. இப்பணிகளை செய்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை செய்து முடிக்க வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது பிரம்மபுத்திரா நதியின் மீது 6 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதே போல, நீர்வழிப் பாதைகளையும் 5 நட்சத்திர மற்றும் 7 நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


