இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2 ஜி வழக்கு: விடுவிக்ககோரி மூத்த வழக்குரைஞர் மனு

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:38 pm

DIN

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டார். இவரது பெயரை அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், 2ஜி வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை ஆனந்த் குரோவர் அணுகியுள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 2 ஜி வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக சிறப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சி துறை கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்தது. எனவே, என்னை அனைத்து 2ஜி வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.