காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த கனடா பிரதமர்! 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த கனடா பிரதமர்! 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை தில்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் வியாழனன்று தில்லி திரும்பினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளியன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த  ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார்.

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார்.  அப்போது சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ராகுலிடம் அவர் விசாரித்தாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com