இனி வரும் காலங்களில் விமானப் பயணத்தின் போது நடுவானில் வைஃபை வசதியைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறும் வகையிலான புதிய அறிவிப்பை டிராய் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்மூலம் இந்திய எல்லைக்குட்பட்ட வான்வழிப் பயணங்களின் போது இந்த சேவையை பெறும் வகையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொலைதொடர்புத்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனால், இந்திய எல்லையில் பயணிக்கும் இந்திய மற்றும் அந்நிய விமானங்களில் உள்ள பயணிகள் இந்த சேவையைப் பெற முடியும். இது உலகத் தரத்துக்கு இருக்க வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இதில் சில நிபந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பயணிக்கும் விமானம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்துக்குள்ளாக பறக்க வேண்டும். அதுபோல பயணிகள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை ஃப்ளைட் (அ) ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றினால் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் சேவை செயல்படவில்லை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்

மருத்துவா்களை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.27 கோடி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



