தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆட்சேபகரமான கருத்து: சிறையில் தவிக்கும் அட்மின்'

கட்செவி அஞ்சல்(வாட்ஸ்ஆப்) குழுவிலுள்ள ஒருவர் ஆட்சேபத்துக்குரிய கருத்தைப் பதிவிட்டதன் காரணமாக, அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்(அட்மின்) 5 மாதங்களாகச் சிறையில் 

Updated On :24 ஜூலை 2018, 1:11 am IST

கட்செவி அஞ்சல்(வாட்ஸ்ஆப்) குழுவிலுள்ள ஒருவர் ஆட்சேபத்துக்குரிய கருத்தைப் பதிவிட்டதன் காரணமாக, அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்(அட்மின்) 5 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர், இந்திய தேசத்துக்கு எதிராக கட்செவி அஞ்சலில் கருத்து பதிவிட்டதாகப் பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததையடுத்து, பல்வேறு குற்றவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அந்தச் சிறுவர் மீதும், அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜூனைத் மேவ்(21) என்ற இளைஞர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
இதனையடுத்து, அவ்விருவரும் 5 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
அந்தச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டதையடுத்து, ஜூனைத் சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்நிலையில், காவல் துறையினர் வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடிக்காமல், காலதாமதம் செய்து வருவதால், கடந்த 5 மாதங்களாக ஜூனைத் சிறையில் தவித்து வருவதாக, அவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். மேலும், ஜூனைத் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை ஜாமீனில் எடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும், சிறையில் இருப்பதனால் அவரின் கல்லூரிப் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், அவரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காவல் துறையினர், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.