தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பசுப் பாதுகாப்பிற்காக மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி: இது ராஜஸ்தான் ரகளை 

மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ஜெய்ப்பூர்: மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநில அரசு பசுக்களின் பாதுகாப்பிற்கு என்று தனியாக அமைச்சகம் ஒன்றை உருவாக்கியது. அதன் மூலம் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பினை மாநில நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதனை மாநில நிதி மற்றும் வருவாய் இணைச் செயலாளரான முகேஷ் குமார் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அறிவிப்பில் மாநிலத்தில் விற்கப்படும் உள்ளூர் மதுபானங்கள், அந்நிய நாட்டு மதுபானங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்நிய நாட்டு மதுபானங்கள், நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 20% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு ஜுலை 23 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில முதல்வர் வசுந்தராவின் இந்த முடிவானது ஆர்எஸ்எஸ் மற்றும் பசு பாதுகாப்பு செயல்பாட்டாளர்களை குளிர்விக்கும் விதமாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.