சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பசுப் பாதுகாப்பிற்காக மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி: இது ராஜஸ்தான் ரகளை 

மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2018, 6:26 pm IST

ஜெய்ப்பூர்: மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநில அரசு பசுக்களின் பாதுகாப்பிற்கு என்று தனியாக அமைச்சகம் ஒன்றை உருவாக்கியது. அதன் மூலம் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பினை மாநில நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதனை மாநில நிதி மற்றும் வருவாய் இணைச் செயலாளரான முகேஷ் குமார் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அறிவிப்பில் மாநிலத்தில் விற்கப்படும் உள்ளூர் மதுபானங்கள், அந்நிய நாட்டு மதுபானங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்நிய நாட்டு மதுபானங்கள், நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 20% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு ஜுலை 23 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில முதல்வர் வசுந்தராவின் இந்த முடிவானது ஆர்எஸ்எஸ் மற்றும் பசு பாதுகாப்பு செயல்பாட்டாளர்களை குளிர்விக்கும் விதமாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.