உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

ஜூலை 1-ஐ ஜிஎஸ்டி தினமாக அனுசரிப்பு - மத்திய அரசு முடிவு

ஜூலை-1 ஆம் தேதியை ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2018, 5:00 pm IST

கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சியில் அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் தொடங்கி வைத்தனர்.

‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அப்போது அமலில் இருந்த 12-க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

தில்லி அம்பேத்கர் பவனில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள், வரித் துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். 

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்ற இருக்கிறார். 

சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிச் சீா்திருத்தமாக ஜிஎஸ்டி கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.