டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அயோத்தியில் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படுவது உறுதி: கேசவ் பிரசாத் மௌரியா

அயோத்தியில் கடவுள் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படுவது உறுதி என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத்

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:05 am IST


அயோத்தியில் கடவுள் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படுவது உறுதி என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியிட வேண்டும் என்று முடிவு எடுப்பது உச்சநீதிமன்றத்தின் தனி உரிமை ஆகும். அதேநேரத்தில், அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோயில் கட்டப்படும் என்பதை மட்டும் நான் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
அயோத்தியில் ராமஜென்மபூமியில் பாபர் பெயரில் இனி சிறிய கல்லை கூட அவ்வளவு எளிதில் வைக்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் அயோத்தி விவகாரம் குறித்த மனு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் அரசோ, மனுதாரரோ எதையும் செய்ய முடியாது. அயோத்தியில் ராமருக்கு அமைக்கப்பட இருக்கும் சிலையையும், ராமர் கோயில் விவகாரத்தையும் ஒப்பிடக் கூடாது. அந்த இரு விஷயங்களும், தனித்தனி விஷயங்களாகும். அயோத்தி வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். இதே எண்ணத்தைத்தான், ராம பக்தர்கள் ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக, அயோத்தியில் எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு அமைந்ததும், அயோத்தி வளர்ச்சியடைய தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒருபக்கம் கோயில்களுக்கு சென்று மக்களை தவறாக வழிநடத்துகிறார். மறுபக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 2019ஆம் ஆண்டு வரையிலும் அயோத்தி தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். இப்படி வலியுறுத்துவதற்கான காரணம் குறித்து ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.