

புபனேஷ்வர்: ஒடிஷா தலைநகர் புபனேஷ்வரில் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன் எதிரொலியாக, அங்கு மதுக்கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
14-ஆவது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புபனேஷ்வரில், நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளன. இதற்காக மாநிலஅரசின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
இந்நிலையில் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன் எதிரொலியாக, புபனேஷ்வரில் மதுக்கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன் காரணமாக மதுக்கடைகளின் வேலை நேரத்தை அதிகரிக்கலாம் என்ற விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று, வேலை நேரமானது அதிகாலை 01.30 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக தகவல் தெரிவித்த கலால் வரித்துறை அதிகாரியொருவர், ஒடிஷாவில் தேசிய அல்லது சர்வதேச அளவிலான நிகழ்வுகள் நடைபெறுவதாக இருந்தால், ஒரு அறிவிப்பு மூலம் மதுக்கடைகளின் வேலை நேரத்தை மாநில அரசு அதிகரிக்கலாம் என்று தெரிவித்தனர்.
அதேநேரம் விருந்தினர்கள் மற்றும் வீரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளிலேயே மது அருந்த முடியும் என்பதால், இந்த நேர நீட்டிப்பு என்பது தேவையில்லாத ஒன்று என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.