

ஒடிஸாவில் உள்ள 21 இரவு சுற்றுலாப் பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும் என உணவு மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஒடிஸா அரசுக்கு திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
ஒடிஸா மாநிலம் முழுவதும் எண்ணற்ற சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. குறிப்பாக 21 இரவு சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. மேலும் 9 சுற்றுலாப் பகுதிகளை ஏற்படுத்தும் இடங்களும் உள்ளன. எனவே பூரி மற்றும் கோனார்க் பகுதிகள் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாவை மேம்படுத்தி பிரபலப்படுத்த வேண்டும் என உணவு மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒடிஸா அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் ஒடிஸாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக தங்கள் தரப்பில் இருந்து விலைச் சலுகைகளை அறிவித்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று சுற்றுலாப் பகுதிகள் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் அங்குள்ள மக்களுடன் இணைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு போதிய பொருளாதார நிலையை ஏற்படுத்தவும் தயாராக இருப்பதாக அச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறந்த சுற்றுலா அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை சர்வதேச தரத்தில் அமையும் விதமாக வடிவமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.