

எஸ்பிஐ, ரயில்வே என பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாங்கித் தருவதாகக் கூறியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜரபு பிரணாய் ராகுல் என்பவர் ரயில்வே, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் வருமானவரித்துறை என பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அவர் பலரிடம் இதுபோன்று ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸார் பிரணாய் மீது 6 வழக்குகளின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் பிரணாய், சன்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.