காற்று மாசு எதிரொலி காரணமாக மின்சார வாகன திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தில்லி அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
தில்லியில் ஒவ்வொரு நாளும் காற்றின் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சுவாசிப்பதற்கு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த காற்று மாசுக்கு வாகன போக்குவத்தும் அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மின்சார வாகன திட்டம் 2018 தில்லி அரசால் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருகிற 2023-ஆம் ஆண்டு மின்சாரத்தில் இயங்கு வாகனத்தின் பயன்பாட்டினை 25 சதவீதம் அதிகரிக்கும் வகையில் இதனை திட்டமிட்டுள்ளனர்.
தில்லி மாசுக்கு வாகன பயன்பாடும் 30 சதவீதம் காரணமாக உள்ளது. எனவே அதை குறைக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் சுவாச சிக்கல்களை குறைக்க முடியும் என நம்புகிறோம். மின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.22 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மின் டாக்ஸி வாகனங்களுக்கு இலவச பதிவும், ஒவ்வொரு சவாரிக்கும் ரூ.10, ஒவ்வொரு 3 கி.மீ. ஒரு சார்ஜிங் பங்க் ஆகியவை தில்லி முழுவதும் ஏற்படுத்தப்படும் என தில்லி சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.