

அயோத்தியில் ராமர் கோயில் அமையவுள்ள பகுதியை லட்சக்கணக்கானோருடன் உத்தவ் தாக்கரே பார்வையிட உள்ளதாக சிவசேனா வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறுகையில்,
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியை நேரில் வந்து பார்வையிடுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராமஜென்ம பூமி அமைப்பின் தலைவர் ஜென்மேஜாய் ஷரன்ஜி அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்த அழைப்பை ஏற்று தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அயோத்திக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் செல்கிறார்.
அயோத்திக்கு அவர் மட்டும் தனிமையில் செல்லாமல் தன்னுடன் லட்சக்கணக்கானோரை அழைத்துச் செல்கிறார். சிவசேனாவின் வலிமை, நம்பிக்கை மற்றும் உறுதி இல்லாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியாது. மேலும் அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால் எப்போதும் கட்ட முடியாது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.