வழிபடலாம்; ஆனால் அவமரியாதை செய்யக் கூடாது: சபரிமலை விவகாரம் குறித்து ஸ்ம்ருதி இராணி  

வழிபடலாம்; ஆனால் அவமரியாதை செய்யக் கூடாது என்று சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி தெரிவித்துள்ளார். 
வழிபடலாம்; ஆனால் அவமரியாதை செய்யக் கூடாது: சபரிமலை விவகாரம் குறித்து ஸ்ம்ருதி இராணி  
Published on
Updated on
1 min read

மும்பை: வழிபடலாம்; ஆனால் அவமரியாதை செய்யக் கூடாது என்று சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் நடந்தது. 

இந்நிலையில் வழிபடலாம்; ஆனால் அவமரியாதை செய்யக் கூடாது என்று சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி தெரிவித்துள்ளார். 

பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் செவ்வாயன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அமைச்சர் என்ற முறையில் வரவேற்கிறேன். அதேசமயம் தனிப்பட்ட முறையில் எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். 

சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. மற்றவர்களின் நம்பிக்கையை நாம் மதிக்க வேண்டும். 

உங்களது மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் அணிந்து மாதவிடாய் ரத்தம் சொட்ட நண்பர்கள் வீட்டுக்குச் செல்வீர்களா? மாட்டீர்கள் அல்லவா? அதே போன்ற மரியாதை கடவுளின் வீடான கோயிலுக்குச் செல்லும் போதும் இருக்க வேண்டும். 

இதுதான் வழிபாட்டுக்கும், மரியாதைக்கும் உள்ள வித்தியாசம். கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் உரிமை உள்ள அதேசமயம் மதம் சார்ந்த மற்றவர்களின் உயரிய நம்பிக்கையையும் நாம் மதிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com