முன்னாள் ராணுவ வீரர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்திப்பு
இந்திய நாட்டுக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சந்தித்துப் பேசினார்.


புது தில்லி: இந்திய நாட்டுக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்தால், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து குற்றம்சாட்டிய ராகுல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் கோடியைத் தூக்கிக் கொடுத்துள்ளது. ஆனால், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்க மறுக்கிறது என்று சாடினார்.
30 நிமிட நேர சந்திப்பின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் பேசிய ராகுல், அனில் அம்பானிக்குக் கொடுத்த ரூ.30 ஆயிரம் கோடியிருந்தால், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...