எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மத்தியப் பிரதேச மாநில முதல்வரின் வாகனம் மீது கல்வீச்சு: காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு 

மத்தியப் பிரதேசம் மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் பயணம் செய்த வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 2:45 pm IST

போபால்: மத்தியப் பிரதேசம் மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் பயணம் செய்த வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிதி மாவட்டத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சுர்ஹாத் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் கடந்து சென்ற பொழுது சாலை ஓரமாக  நின்ற விஷமிகள் வாகனத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

அதிஷ்டவசமாக அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை தாக்குதல் நடைபெற்றது மாநில எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங்கின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஷிவ்ராஜ் சிங் சவுஹான் காங்கிரஸ் தலைவர் அஜய் சிங்குக்கு வினா எழுப்பும் வகையில், 'உங்களுக்கு தைரியம் இருந்தால் வெளிப்படையாக சண்டையிடுங்கள். நான் உடல்ரீதியாக வலிமை குறைந்தவன்தான். ஆனால் உங்களிடம் தோற்றுவிட மாட்டேன். மாநில மக்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' காங்கிரஸ் எப்பொழுதும் வன்முறை கலாச்சாரத்தினை நம்புவதில்லை. விஷமிகள் யாரோ என் பேரையும் சுர்ஹாத் மக்களின் பேரையும் கெடுக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.