ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராணுவ வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சி: நிர்மலா சீதாராமன்

நமது பாதுகாப்புப் படையை பலவீனப்படுத்தும் இச்செயல் சரியானது தானா? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

News image
Updated On :3 ஏப்ரல் 2019, 9:27 am

DIN

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும். தேச விரோத சட்டம் நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசத்துரோக தண்டனைச் சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதியை ஏற்க முடியாது. 

நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காதது காங்கிரஸ் கட்சி. இது ராணுவ வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் செயலாகும். நமது பாதுகாப்புப் படையை பலவீனப்படுத்தும் இச்செயல் சரியானது தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.