மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஷ்மீர் விவகாரம்: நாளை அவசரமாகக் கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கும் மசோதாவை இந்தியா நிறைவேற்றியுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் செவ்வாயன்று கூடவுள்ளது.  

News image
Updated On :5 ஆகஸ்ட் 2019, 2:05 pm

DIN

இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கும் மசோதாவை இந்தியா நிறைவேற்றியுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் செவ்வாயன்று கூடவுள்ளது.  

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் 35எ சட்டப்பிரிவை நீக்குதல் ஆகிய இரண்டு மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இரு அவைகளிலும் திங்களன்று நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. இந்த முடிவும் கூட காஷ்மீர் மக்களின் ஒப்புதலைப் பெற்று மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சட்டவிரோதமான ஒன்று' என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் செவ்வாயன்று கூடவுள்ளது.   

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்ததையடுத்து, செவ்வாய் காலை 11.00 மணியளவில் இந்த  கூட்டம் நடைபெறும் என பாகிஸ்தான் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.