மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்டம் தன் கடமையைச் செய்தது: காவல் ஆணையர் சொன்ன பதில்

தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 டிசம்பர் 2019, 2:08 pm

DIN


ஹைதராபாத்: தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

திசையெங்கும் இன்று தெலங்கானாவும் என்கவுன்டரும்தான் தேசியச் செய்தி மட்டுமல்ல.. தலைப்புச் செய்தியே.

அந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து இன்று பிற்பகலில், சம்பவ இடத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.

அப்போது அவர் சம்பவம் பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கினார். 
பெண் மருத்துவரின் செல்போனை தாங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனை எடுத்துத் தருவதாகவும் கூறியதால் குற்றம்சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.

இன்று அதிகாலை, நான்கு பேரையும், சம்பவ இடத்தில் குற்றத்தை எப்படி செய்தார்கள் என்று நடித்துக் காட்டும்படி சொன்னோம். அப்போது திடீரென சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களது கையில் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். முகமது ஆரிஃப்தான் எங்களை நோக்கி சுட்டார். 

நான்கு பேரையும் பாதுகாப்பாகவே அழைத்து வந்தோம். எங்களுடன் 10 காவலர்கள் இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக எங்களது துப்பாக்கியை அவர்கள் பறித்துவிட்டனர். முதலில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்

ஒரு கட்டத்தில் போலீஸார் மீது நான்கு பேரும் சேர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதில் எஸ்.ஐ. வெங்கடேஷ் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர்.]

Story image

நான்கு பேரும் எங்களை தாக்கியபோதும் கூட போலீசார் அமைதி காத்தனர். சரணடைய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், வேறு வழியில்லாமல் எங்களைத் தற்காத்துக் கொள்ள நான்கு பேரையும் என்கவுன்டர் செய்தோம். சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் என்கவுன்டர் நடந்தது என்று கூறினார்.

இறுதியாக அவர் கூறுகையில், நான்கு பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டதில் சட்டம் தன் கடைமையைச் செய்துள்ளது. என்கவுன்டர் குறித்து மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.