மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உன்னாவ் பெண்ணை விட மிகக் கொடூரமான கதி ஏற்படும்: பெண் வீட்டில் மிரட்டல் நோட்டிஸ்

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் வீட்டில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் நோட்டீஸ் ஒட்டிச் சென்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு
Updated On :13 டிசம்பர் 2019, 9:36 am

DIN


மீரட்: உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் வீட்டில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் நோட்டீஸ் ஒட்டிச் சென்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்றால், உன்னாவ் பெண்ணுக்கு நேர்ந்ததை விட மிகக் கொடூரமான முடிவு ஏற்படும் என்று ஹிந்தியில் டைப் செய்து பிரிண்ட் எடுத்து, பெண்ணின் வீட்டுச் சுவரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒட்டிச் சென்றுள்ளனர்.

ஏற்கனவே, இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்ற, அப்பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தாக்கியதில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

ஏற்கனவே, உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதைச் சொல்லி மீரட்டில் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாலியல் பலாத்காரத்தக்கு உள்ளான பெண்ணை மிரட்டியுள்ளனர் என்பது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.