உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபருடன் பழகி வந்த 22 வயது தங்கையை, அவரது அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் முசாஃபர்நகர் மாவட்டம் போபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ் குமார் (25). இவரது தங்கை தியானி (22). 4 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு அதேபகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுடன், தியானி உணவருந்தச் சென்றார்.
அப்போது, அங்கு வந்த 4 பேர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்ததால், சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம், தியானியின் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. தியானி வேறு சமூகத்தை சேர்ந்த நபருடன் பழகி வந்ததை அறிந்த அவரது சகோதரர் ஆதேஷ்குமார், தங்கை தியானியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆதேஷ்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரிடமிருந்து கைத்துப்பாக்கியை
பறிமுதல் செய்தனர். ஆதேஷ்குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


