4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து விழுந்த 14 மாதக் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
Updated on
1 min read


மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து விழுந்த 14 மாதக் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

மும்பை கிழக்கு கோவாண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபரின் குழந்தை அதர்வா. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 4வது மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்து விட்டது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக வீட்டின் அருகில் இருந்த மரக்கிளையில் குழந்தை விழுந்ததால், தரையில் விழாமல் தப்பித்தது. இதனைப் பார்த்த குழந்தையின் பாட்டி பெற்றோருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.

உடனடியாகக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. கல்லீரலில் காயம் ஏற்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com