மத்திய நிதித்துறை செயலர் அஜய் நாராயண் ஜாவுக்கு ஒரு மாத காலம் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை வெளியானது. முன்னதாக அவரது பணி நீட்டிப்புக்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
1982-ஆம் ஆண்டு மணிப்பூரில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியான ஜாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு அவருக்கு ஒரு மாத காலம் பதவி நீட்டிப்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆவது நிதிக்குழுவின் உறுப்பினர் பொறுப்பை அவர் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் குழுவின் உறுப்பினராக இருந்த சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அந்த இடம் காலியானது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








