மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை

ஊழல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :9 ஜூலை 2019, 8:53 am

DIN

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊழல், கிரிமினல் குற்றம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புணே, ஜெய்பூர், கோவா, கான்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ராஞ்சி, லக்னௌ நகரங்கள் உட்பட தமிழகம், உத்தரப்பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப்பிரதேசம் என 19 மாநிலங்களுட்பட்ட 110 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ரூ.1,139 கோடி வங்கி ஊழல் தொடர்பாக வங்கி அதிகாரிகள் உட்பட 13 தனியார் நிறுவனங்களில் ஜூலை மாத துவக்கத்தில் நாடு முழுவதும் இதுபோன்று அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.