/

தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன: ப.சிதம்பரம்

தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:38 am

DIN

தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதாவை  நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. 

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. இதனால், தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வியடைந்தது. விரைவில் இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில்,
தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன. மாநிலங்களவையில் அதிமுகவின் 13 உறுப்பினர்கள் திருத்தங்களை ஆதரித்து வாக்களித்தனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.