மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை: மோடியைக் கலாய்த்த மாயாவதி 

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2019, 4:58 pm IST

லக்னௌ: சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ஆம் தேதி மோடி பதவியேற்ற பின்னர்  மத்திய புள்ளியியல் துறை சார்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பாக புள்ளிவிவரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதனபடி இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்ற உடனேயே மத்திய புள்ளியியல் துறை சார்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்நாட்டின் ஏழை மக்களுக்கோ அல்லது வேலை வாய்ப்பின்மையால் பலியானவர்களுக்கோ மனம் வருந்த வேண்டிய தேவையில்லை. அதற்கான காலம் கடந்து தற்போது மிகவும் தாமதமாகி விட்டது. சிதறிய பாலுக்கு இனி அழுவதில் எந்த பயனுமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு குறைந்துள்ளது தொடர்பாகவும் மாயாவதி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.