பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை: மோடியைக் கலாய்த்த மாயாவதி 

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

Published On :

லக்னௌ: சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ஆம் தேதி மோடி பதவியேற்ற பின்னர்  மத்திய புள்ளியியல் துறை சார்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பாக புள்ளிவிவரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதனபடி இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்ற உடனேயே மத்திய புள்ளியியல் துறை சார்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்நாட்டின் ஏழை மக்களுக்கோ அல்லது வேலை வாய்ப்பின்மையால் பலியானவர்களுக்கோ மனம் வருந்த வேண்டிய தேவையில்லை. அதற்கான காலம் கடந்து தற்போது மிகவும் தாமதமாகி விட்டது. சிதறிய பாலுக்கு இனி அழுவதில் எந்த பயனுமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு குறைந்துள்ளது தொடர்பாகவும் மாயாவதி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.